ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!
பூங்காற்றிலே உன் சுவாசத்தை,
தனியாகத் தேடிப் பார்த்தேன்!
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே!
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்!
உயிரின் துளி காயும் முன்னே,
என் விழி உனை காணும் கண்ணே!
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா!
காற்றின் அலைவரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா?
நெஞ்சு நனைகின்றதா?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரை ஏற்றி,கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா!
வானம் எங்கும் உன் பிம்பம்,
ஆனால் கையில் சேரவில்லை!
காற்றில் எங்கும் உன் வாசம்,வெறும் வாசம் வாழ்க்கையில்லை!
உயிரை வேரோடு கிள்ளி,என்னைச் செந்தீயில் தள்ளி,
எங்கே சென்றாயோ கள்ளி?
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!
வரிகள்: வைரமுத்து
திரைப்படம் : உயிரே
என்னைக் கவர்ந்த சில பாடல்களில் இதுவும் ஒன்று. இன்றும் இது போன்ற பாடல்கள் வரத்தான் செய்கின்றன .